Sunday 20 January 2019

பொங்கலோ பொங்கல்

முன் குறிப்பு...இதை 14/01/2019 தேதியிட்டுப் படிக்கவும்


 பொங்கலுக்காக திடீரென்று 12 ம் தேதி மதியம் முதல் விடுமுறை என்று சொல்லி விட்டார்கள்....

அம்மாக்களுக்கெல்லாம் திண்டாட்டமாகவும் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாகவும் இருக்கப்.போகும்.பொங்கலை எப்படிக் கொண்டாடலாம் என்று நினைத்தவாறே வீடு வந்தேன்...

அம்மா.காலையில்.தான் சென்னை வந்திருந்தாள்...பாவமாய் களைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்..மதியம் 1.40 க்கு வீடு வந்து கதவைத் தட்டிய நான் என்னம்மா இப்படி நாலு மணி வரைக்கும் தூங்கிட்டிங்க...ஒண்ணும் சமைக்கலையா..சரி..சரி..இன்னைக்கு கடைல சாப்டலாம்னு சொன்னதும் அம்மா மிரண்டு போனாள்..11 மணி வரை முழிச்சுத் தாண்டி இருந்தேன்...அவ்வளவா களைப்பாப்.போச்சு...சே...என்று சொல்லி விட்டு தட்டுத்தடுமாறி அடுப்படிக்குள் நுழைந்து..ரசம் வைச்சு..துவையல் வச்சு..அப்பளம்.பொறிச்சுத் தரேன்..சாப்டு..கொஞ்ச நேரம்.கழிச்சு, குழம்பும் கூட்டும் செஞ்சு தரேனு சொல்லி விட்டு பரிதாபமாய் வேலை பார்க்கத் தொடங்கினாள்...

என்னோட அம்மாவுக்கு ரொம்பப் பசிக்குதாடா..சாரி...சாரிடா..எப்படி தூங்குனேனெ தெரியலை டா என்றாள்..

இனிமேலும்.அம்மாவைப் பதற வைக்க மனமில்லாமல்..ஹைய்யோ..அம்மா நா என்ன சொன்னாலும்.நம்புவீங்களா..மணி இன்னும் 2 ஆகலை..எனக்கும்.பசிக்கலை..மெல்லப்.பண்ணுங்க...என்று ச்
சொல்லி சமாதானப் படுத்துவதற்குள்.....போதும் போதும் நு ஆகிப்போச்சு
( சில சமயம்.அம்மா.என்னை என்னோட அம்மா என்று அழைப்பாள்..அதற்குக் காரணம்.நான்.அவள்.அம்மா.மாதிரி வெள்ளையாக இருக்கும்.காரணமா..அல்லது சற்றே அவள்.அம்மாவின் சாயல் காரணமா...அல்லது நான் காட்டும்.அக்கறை அல்லது.செய்யும்.செயல்கள்.காரணமாகவோ எப்போதாவது ..கூப்பிடும் போதோ சொல்லும்.போதோ என்னோட அம்மா.என்றே சொல்வாள்....)

இந்தப் பொங்கலுக்குக்.கதைப் புத்தகங்கள்.படிச்சுத் தள்ளனும்னு நினைச்சிருந்தேன்..அப்றம்..MOM ல A3  sheet  வரை படங்கள் போட்டு விட்டு ஏதேனும் mini project செய்து விடணும்..அப்றம் அம்மாவுக்கு சில உதவிகள்...

முக்கியமான வேலையாக ஞாயிற்றுக்கிழமை காலைல பாசுமதி அரிசில வெஜ் புலவ்..மதியம் சாம்பார்..வறுவல்..இரவுக்கு பூரியும் கிழங்கும்..இதெல்லாம் சாப்பிடணும்னு எனக்கு நானே நினைச்சுக்கிட்டு புத்தகங்கள் அடுக்க ஆரம்பிச்சேன்

முதல்ல.கடைக்குப் போகச் சொன்னாங்க..அப்றம்.மாடிக்குப் போய் துணி எடுத்து வரச் சொன்னாங்க..அப்றம் யார் யார் என்ன என்ன வேலை பார்க்கப் போறோம் நு "லிஸ்ட்" போடச் சொன்னாங்க..( என்னாது வேலை பாக்கணுமா?..இது நம்ம லிஸ்டுலயே இல்லையேனு நினைச்சு)

சரிதான்..ரெண்டு ரூம்..ஒரு கிச்சன்..ரூம் சைஸ் க்கு ஒரு ஹால்..இவ்ளோ தானே மொத்த வீடே...புதுக்கோட்டை வீடு மாதிரி ஒண்ணும் பெரிய வீடு இல்லையே...எல்லாம் சமாளிச்சுக்கலாம்..சூர்யானு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டெர் லிஸ்ட் போட்டோம்..

மாலை சக்தி வந்தாள்..அம்மா நாளை காலை 5 மணியிலிருந்து துவங்கலாம்..இப்ப சாப்டு ஜாலியா பேசிட்டு..குறும்படம் ஏதாவது பாத்துட்டு படுப்போமானு கேட்டா??
(மறுபடியும் "ஆப்பா?" ) நெவர்,எவர்,கிவ் அப்..இந்த உலகமே உன்னை எழுப்பினாலும்...என்ன ஆனாலும்,,,9 மணி வரைத் தூங்கலாம்னு நினைச்சேனே...அதுக்கும் பெரிய ஆப்பா வைக்கிறாளேனு நடுங்கிக் கொண்டே அம்மாவைப் பார்த்தேன்..

இல்லைடா..காலைல 6 மணிக்கு மேல எழுந்து.. முதல்ல காப்பி குடிச்சிட்டு..கொஞ்சம் வேலை பாத்துட்டு ..பசிச்சா..சாதம் ரசம்..வச்சு..துவையல் அரைக்கலாம்னு அம்மா சொல்ல...( மறுபடியும் மற்றொரு ஆப்பா???)

அம்மா நாளைக்கு வெஜிடபுள் புலவ்..பூரி இப்படி ஏதும் இல்லையாம்மா?? லீவ் நா ஏதாச்சும் ஸ்பெஷல் பண்ணுவீங்களேனு நான்.பரிதாபமாய் கேட்க..அதெல்லாம் சாதா லீவ் ல சூர்யா..பொங்கல் வேலை பாக்கணும் ல ..வீடு சுத்தம் பண்ணனும்..புதுக்கோட்டைனா வீடெல்லாம் மாவுக்கோலம் போடணும்..மேலே கட்டிப் போட்ட பாத்திரங்கள் கழுவணும்..சாமி ரூம் துடைக்கவே ஒரு நாள் ஆகும்...இங்க அந்த மாதிரி இல்லைன்னாலும் வீடு முழுதும் நாளை ஒரே நாள் ல எல்லாம்.செஞ்சு முடிக்கணும் சூர்யானு சக்தி சொல்ல,,,அம்மா மாற்றுக் கருத்தே இல்லாதது போல தலையை மட்டும்.ஆட்டி வழி மொழிந்து கொண்டாள்..

( ஊர் லருந்து எவனோ எங்கம்மாவுக்கு செய்வினை வச்சு அனுப்பிருக்கான் போல)

ஒரு வழியா ஞாயிறு காலை..பல்வேறு அலுப்புகளோடும்,,சில பல சலிப்புகளோடும் எழுந்தேன்..

சரிதான் அம்மா போட்ட லிஸ்ட் படி என் வேலையை நான் முடிச்சுட்டா..அப்புறம் நான்.படிக்கலாம்..நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பூரி கிழங்கு செய்துக்க வேண்டியது தானே நு முடிவு பண்ணி லிஸ்டை எடுத்துப் பார்த்தேன்..

அதன் படி துணி காயப்போடுதல்..எடுத்து மடித்தல்..மெத்தை தலையணை உரை..வாஷிங் மிஷினில் போட்டு உலர்த்தி மடித்து வைத்தல்..காய்கறி அடுக்குதல்..இது மட்டும் தான் இருந்தது..

சே!! இதுக்கா பயந்தோம்..இதெல்லாம் தூசு மாதிரி...நினைச்சுக்கிட்டே காப்பியை ரசிச்சுக் குடிச்சேன்..

ஒரு காப்பியை எவ்ளோ நேரம் டி குடிப்ப..சீக்கிரம் துணிகளை மாடிக் கொடில.போட்டு கிளிப் போட்டு வா என்று ( கிட்டத்தட்ட) கத்தினாள் சக்தி..

அவள் கொடுத்த துணிகளைக் காயப் போட ஏழு தடவை மாடி ஏற வேண்டி இருந்தது..

பழைய மெத்தை விரிப்பு..தலையணை உரை..புதியது ஒரு செட்..திரைச்சீலைகள்..எல்லாத்தையும் மெஷின்ல போட்டு காயப்போட்டு வந்தேன்..

இதற்குள் இரண்டு முறை போட்டதை புரட்டிப் போட்டு வரச் சொன்னார்கள்...மூன்று முறை " டீ" போடச் சொன்னார்கள்..

( இவங்க ரெண்டு பேருக்கும் பசியைக் கொடு கடவுளேனு வேண்டிக்கிட்டு..அடுப்படிக்கு வரணும்னு ரெண்டு பேருக்குமே தெரியாதானு நொந்த படி..அடிக்கடி அவர்கள் முன் தண்ணீர் குடித்தேன்..பசிக்குதுனு சிம்மாலிக்கா காட்டலாம் நு

 கட்டிலுக்கு அடியில் இருந்த குப்பைகள்.,,பழைய பாட்டிகள்..என்று எல்லா இடங்களிலுமிருந்த வேண்டாதவைகளைப் பையில் போட்டு உடனடியாய் கீழே இறங்கு வைத்து விட்டு வரச் சொன்னார்கள்..வீடு இருப்பது இரண்டாவது மாடி..ஒரு வளைவுக்கு ஒன்பது படிகள் என ஒரு தளத்திற்கு 18 படிகள்..ஆக18+18 =36 படிகள்...கீழே 16 முறையும் மேலே 15 முறையும் போயிருக்கேன்..அப்ப எத்தனை படிகள் நடந்துருக்கேன்????( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

அப்பவே நினைச்சேன்...துணி காய வைக்குறதும் குப்பை வைக்கிறதும் மட்டும் என்.பேர்ல எழுதி இருக்காங்களே....நு எனக்கே தோணிருக்கணும்...( சூர்யா இப்படி ஏமாந்துட்டாளே)

11 மணி வரை குப்பைகளோடும் விளையாட வைத்து விட்டு மனமிரங்கி சமைக்க வந்தாள் அம்மா..

மோர் சாதம்..( அதிலும் 90% தண்ணீர்..10% மோர்...மோர் என்ற பெயரில் வெள்ளை என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்ட திரவம் தான் இருந்தது...இதை எல்லாம் கண்டு கொள்ளாதா..இந்த எடப்பாடி அங்கிள் அரசு???)

நான் என்ன சாப்பிட நினைச்சேன்??ஆனா..?!?! என்று மனசுக்குள்ள பழைய சிவாஜி கணேசன் தாத்தா பாடிய( வாய் அசைத்த) சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..என்று பாடிக் கொண்டே வேலை பார்த்தேன்..

ஒரு வழியாக இரவு 8 மணி..இப்ப ரசமும் சாதமும் மட்டும்..அப்பளம்.கூட இல்லை.."புலவ்" சாப்பிட ஆசைப்பட்ட சூர்யாவை இப்படி புலம்ப வச்சுட்டாங்களே!!! எங்க படிக்க???அதோட நடந்து..நடந்து..இடுப்பும் காலும் நொந்து போச்சு..

மீத வேலையை நாளைக்குப்.பாக்கலாம் நு சொல்லி உடனே அதை அமுல்.படுத்திட்டா சக்தி.ஹாலை லைட்டா கூட்டி அங்கேயே ஒரு விரிப்பு விரிச்சு படுத்துக்கிட்டோம்.தரை எல்லாம் சிலு சிலு நு இருக்கு..கை கால் நடுங்குது.அவங்க ரெண்டு பேரும்.படுத்த நிமிஷத்தில் தூங்கிட்டாங்க.

9 மணிக்குத்தான் எந்திரிக்கணும்னு நினைச்ச சத்தியத்தெல்லாம் தூக்கிப் போட்டுட்டு..காலைல ஆறு மணிக்கே எந்திரிச்சு..குளிச்சு..காப்பியைக் குடிச்சுட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சு ஒரு வழியா மதியத்தோட வேலை முடிஞ்சுது..அம்மாவும் சக்தியும் காய்கறியும்.கரும்பும் வாங்கப் போனாங்க..

கதைக் கோவை நு ஒரு புத்தகம்.நான்கு பாகங்கள் கொண்டது.3ம் 4ம் வேளச்சேரி நூலகத்தில் எடுத்திருந்தேன்.815 பக்கங்கள்.அல்லயன்ஸ் வெளியீடு.முதல் பதிப்பு.1945.இரண்டாம் பதிப்பு.1994 மூன்றாம்பதிப்பு 2013 இவ்ளோ தான் என் மொத்த பொங்கல் விடுமுறை படிப்பு)

பொங்கல் அன்று பேண்ட் ஷர்ட் போட்டுகிட்டு ஜம் நு உட்கார்ந்து படிக்கணும்..சாப்பிடணும்..பேட்டையா..விஸ்வாசமா எந்தப் படம் அம்மா கூட்டிப் போறாள் நு கேட்கணும் நு நினைச்சுக்கிட்டு இருந்தப்பவே..அம்மா காய்கறிகளை வெட்டச் சொல்லி விட்டாள்..ஒரு வழியா பொங்கல் வச்சு..குழம்பு வச்சு சாப்பிட 12 மணி ஆகிடுச்சு.ரொம்ப களைப்பா இருந்தது
பொங்கலுக்கு படம் கூட்டிப் போங்க..Faber castle pencil வாங்கித்தாங்க.புத்தகத்திருவிழாவில் நாவல் நிறைய வாங்கித் தாங்க நு நான் சொல்லச் சொல்ல எல்லாத்தையும் நிதானமா கேட்ட அம்மாவும் சக்தியும் எல்லாத்துக்கும்.பணம் வேணும் ல சூர்யா..அம்மாவுக்கு சம்பளம்.வரலல்லனு முடிச்சுட்டா.( முறிச்சுட்டா)

யாராச்சும்.எனக்கு பொங்கல் வாழ்த்து சொல்லட்டும் கொலை காண்டுல இருக்கேன்.பொங்கல் ஆச்சே!! நல்ல நாள் ..கில்ல நாள் நு செண்டி மெண்ட் கிண்டி மெண்ட் இருந்தா ஓடிப் போயிடுங்க சொல்லிட்டேன்..

நான் தூங்கிட்டதா நினைச்சு பக்கத்தில்.படுத்திருந்த அம்மா என் தலையை நீவி விட்டுக் கொண்டே இருந்த அம்மா சொன்னாள்..சக்தி..நம்ம பாப்பா என்னல்லாம்.படிக்கணும் நு நினைக்கிறாளோ அதெல்லாம் படிக்க வைப்பியாடா என்று கொஞ்சம் குரல் ஆடியது போல் கேட்க," சக்தி, அவளை நல்லபடியா கவனிச்சுக்குவேன் ம்மா..இந்த உலகத்துலேயே எங்களைப் போல்.சிஸ்டர்ஸ் யாரும் இருக்க மாட்டாங்கம்மா...அவ என் செல்லம் ம்மா.."" என்றாள்..


அம்மாவின்.கண்களில்.கண்ணீர் நிறைந்திருக்க வேண்டும்..என் நெற்றியில் இரண்டு சொட்டு விழுந்தது..நெற்றிக்கு முத்தமிட்டாள்..அம்மாவின் மேல் கால்.போட்டுக் கொண்டு அம்மாவின் கை பிடித்துத் தூங்குவது தான் இந்த உலகத்தின் சுகமான செயலாகத் தோன்றியது..

உங்களுக்கும் தோணுதா????

பின் குறிப்பு..1.

நான் இந்த நடைக்கு இவ்வளவு வேலைகளுக்கு வேதனைப்படுகிறேன்..ஆனால்.அம்மா.வாரா வாரம் புதுகையிலிருந்து திருச்சி வந்து திருச்சியிலிருந்து சென்னை தாம்பரத்தில் இறங்கி மாடி ஏறி கீழே இறங்கி பீச் ரயில் பிடித்து கிண்டி வந்து கிண்டியிலும் மாடி ஏறி இறங்கி வேளச்சேரி  51 ஏ பஸ் பிடிச்சு வந்து...வந்ததும் சமைக்க ஆரம்பிப்பாள்..

வரும் நேரமெல்லாம்..துணிகள் துவைத்து..பாத்திரங்கள்.கழுவி..வீடு சுத்தம்.பண்ணி..மாவு அரைத்து...வத்தல் குழம்பு பேஸ்ட் செய்து..இட்லி மிளகாய் பொடி அரைத்து..சில சமயம் எக்ஸ்ட்ரா வேலைகளாக டூ வீலர் சரி பார்த்து..மிக்ஸி சரி பார்த்து எனக்கு போன் சரி பார்த்து..குக்கர் டயர் வாங்கி..என்னை லைப்ரரி கூட்டிப் போய்..சக்திக்கு அவ லெண்டிங் லைப்ரரி கூட்டிப் போய்..கோயில் கூட்டிப் போய்...அம்மா வரும் நேரமெல்லாம் வேலைகளால் முங்கி விடுகிறாள்..

கிளம்பும்.நாளில் படு பயங்கரமாக இருக்கும் வேலைகள்...

அவள் வாழ்க்கையில் எவ்வளவு குழப்பங்களும்.வேலைச் சுமைகளும்.இருந்தாலும் எங்களைக்.கடிந்து கொள்ளாத அம்மாவை நான் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

தவறுகளுக்கு கண்டிப்பாள்..ஆனால் தண்டித்தது இல்லை.அவளுக்கு நாங்கள் நிறைய செய்து தர வேண்டும்..அதற்காகவே நாங்கள்.உயர் நிலை அடைய வேண்டும்..💓💓💓

பின் குறிப்பு 2

இப்பவும் யாராச்சும் அம்மாவிடம் சிபாரிசு செய்யுங்கள்..பேட்ட ..விஸ்வாசம் படம்.பார்க்கணும் Faber castle pencil  வேணும்..

பின் குறிப்பு 3

கொல காண்டெல்லாம் இல்லை..எல்லோரும் என்னை வாழ்த்தலாம்..😅😁😂😃😄

5 comments:

  1. தாமதமான பொங்கல் வாழ்த்துகள் மருமகளே...

    உனது அப்பாவுக்கு எனது நூல் கொடுத்து இரண்டு வருடம் இருக்குமே நீ படித்திருப்பாய் என்று நினைத்து கேட்டேன்.

    தற்போது நான் மிகவும் பிஸி. காரணம் சந்தோஷமான அலைச்சல் நூல் பிறகு அனுப்புகிறேன்.

    எமது சந்தோஷம் அடுத்த பதிவில்...

    ReplyDelete
  2. என் சிறுவயது காலத்தை என் கண் முன்னே மிண்டும் கொண்டு வந்துவிட்டது இந்த பதிவு. உன் அம்மாவும் என் அம்மாவும் ஒன்றுதான் அவர்கள் எல்லாம் கஷ்டப்படவே பிற்ந்து இருக்கிறார்கள்.. என்ன உங்க வீட்டில் பொங்கல் என் வீட்டில் ரம்ஜான் ஆனால் சாப்பிட்டது எல்லாம் ரசம்சாதமும் ரவீஸ் ஊறுகாய்யும்தான்... காலம் மாறும் சந்தோஷங்கள் நிச்சயம் வந்து சேரும் என்பது மட்டும் நிச்சயம்

    ReplyDelete
  3. En anbu chellathu en iniya vazhthukal

    ReplyDelete
  4. துளசிதரன்: மனம் நெகிழ்ந்துவிட்டது. உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் நிச்சயமாக...வாழ்த்துகள்!

    கீதா: சூர்யா ஸாரி லேட் ஆகிப் போச்சு.

    என்னென்னவோ நினைவுகளை எழுப்பியது உங்க பதிவு. அது சரி இருக்கட்டும் பேட்ட யா விஸ்வாசமா என்ன போனீங்க? உங்கள் இருவரின் கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டும் அம்மா ஸ்வாதி அதைக் கண்டு சந்தோஷப்படனும் வாழ்த்துகள் சூரியா அண்ட் சக்தி!

    ReplyDelete