Friday 3 April 2020

உப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்

தனித்திரு:----,விலகி இரு:----வீட்டிலிரு::

மார்ச் 16 ம் தேதி எனக்குப் பிறந்த நாள். 16 ம் தேதி இரவே கல்லூரியிலிருந்து செய்தி வந்துவிட்டது. இனி அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு வரவேண்டாம் என்று.  அவ்வளவு தான். அம்மா சென்னை வந்துட்டா...வீட்ல இருப்பா...காலைல எந்திரிக்கிறோம்..குளிக்கிறோம்..சாப்பிடுறோம்..புக் படிக்கிறோம்...சாப்புடுறோம்...புக்.படிக்கிறோம்...இப்படியாக என் எண்ணங்கள் மிதக்க நல்லாத்தான் இருந்தேன்.

14 ம் தேதி காலை தான் அம்மா ஊரிலிருந்து வந்திருந்தா.16 ம் தேதி பிறந்த நாள் என்பதால் 15 ம் தேதி தான் புது டிரஸ் வாங்க கடைக்கு அழைத்துச் சென்றாள்..மாத மளிகையே வாங்கவில்லை.அதன் பின்னரும் அருகில் தானே கடைகள் இருக்கிறது  என்ற தைரியத்தில் பொருட்கள் வாங்கவில்லை..22ம் தேதிக்குப் பிறகு வாங்கியதால்.பொருட்களின் விலை ஏற்றத்தால் 1000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருட்கள் 2500க்கு வாங்க வேண்டிய நிலை.( சற்றே நிலைமை சரியில்லை)

ம்ம்ம்ம்.அதற்கும்.ராம நவமிக்கும் உப்புமாவுக்கும் என்ன சம்பந்தம்? அதைத் தான் சொல்ல வந்தேன்.எந்த நேரத்தில் அம்மா வந்துட்டா.இனி நல்லா சாப்பிடலாம்னு சொன்னேனோ? ( யார் கண்ணு பட்டுச்சோ😔) இப்படி???

இன்று ராம நவமி என்பதால் நேற்றே வீடு துடைப்பதிலிருந்து தூய்மைப்.பணிகள்.அனைத்தும் நான் மற்றும்.அம்மாவால் பார்த்து முடிக்கப்பட்டிருந்தது

ராமன் காட்டில் வாழ்ந்ததால், நீர் மோரும் பானகமும்.மட்டுமே குடித்தான் என்பதால் அம்மா காலையே எலுமிச்சை ஜூஸை " பானகம்" என்று பெயர் மாற்றித்,தந்தாள்.( ஆத்தி..காட்டுல அவருக்கு.இலையும் கிழங்கும் கிடைச்சிருக்கும் அது தானா இன்னைக்கு முழுக்கவும்😭😳??)

ஆனால் நான்.பயந்தபடி இல்லாமல் சமைத்திருந்தாள். ராமனுக்கு காய்கறிகள்.பிடிக்கும்.ஆனால்.காய்கறிகளின் விலை ஒரு கிலோ 200 ஐ எட்டியதால் அம்மா காய்கறியை விட்டு விலகியும்...காய்கறிகளிடமிருந்து தனித்தும் வீட்டிலிருந்து விட்டாள்.

மதியம் போல் "அம்மா இன்று ராமநவமி கொண்டாடனும்" என்றேன் ( அப்பவாவது பட்சணங்கள் ஏதாச்சும் செய்ய அடுப்படிப்பக்கம் போக மாட்டாளா என்ற நப்பாசையில்)

மகா விஷ்ணு கிட்ட அஷ்டமியும் நவமியும் போய் சோகமா, எங்களை யாரும் கொண்டாடலைனு சொன்னதுக்காக அஷ்டமியில் கண்ணனாகவும், நவமியில் ராமனாகவும் அவதாரமெடுத்தார் மகாவிஷ்ணு என்று ஆச்சி பல முறை பல வருடங்களாக..பற்பல குரலில்.பற்பல தொனியில் சொல்லிவிட்ட விஷயத்தை மீண்டும் சொல்ல...அடடா...இவள் இனி ஒவ்வொரு மாநிலத்துலயும் ராம நவமியை பட்டாபிஷேக நாளாக....திருமண நாளாக...வன வாசம் முடிஞ்சு வந்த நாளாக கொண்டாடுவாங்கனு கதை சொல்ல ஆரம்பிச்சுடுவாளோ?...( பலகாரம் ங்கிற மேட்டரே வரமாட்டேங்குதே)

கடைசியாக ராமனுக்கு மிளகு பலகாரம் பிடிக்கும்.வெல்லத்தால் செய்த கோதுமை.அப்பம் பிடிக்கும்.நாம கோதுமை அப்பம்.செய்யலாம்.ஆனா அதை இன்னைக்கு நீயே try பண்ணு சூர்யானு சொல்ல....இருந்த மாவில்.அப்பம்.மாதிரி ஏதோ ஒண்ணு செய்தேன்..ஆலை.இல்லாத ஊருக்கு இலுப்பைப்.பூ சர்க்கரை மாதிரி ஸ்நாக்ஸ் என்பதே கண்ணில் படாமல்.வாழும் எனக்கு இந்த உலகமே இனிப்பா தெரிஞ்சுது..

இதே மாதிரி தான்  முன்பு ஒரு முறை வெள்ளம் வந்த போதும் வியாபாரிகள் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள்...கொரோனாவை விட கொடிய வைரஸ்கள்

வெள்ளம்.வந்த போது ஒரு வேளை உணவு சாப்பிடுவதே அரிதான விஷயமாக இருந்தது.வீடே பற்றாக்குறையால் நிரம்பி வழிந்தது.அதனைச் சமாளிப்பதற்கு அம்மாவிற்கு ஒரு வருட காலம்.ஆனது.என் தோழிகளின் குடும்பங்கள் இன்னும் கூட அதிலிருந்து மீள இயலாமல் தவிக்கிறார்கள்.

மீண்டும் நான் தலைப்பை விட்டு தள்ளிப் போனதாய் நினைக்காதீர்கள்.

மாலை பள்ளி விட்டதும் எப்போதும் ஆச்சி வீட்டுக்குத்தான் போவோம்.அம்மா அங்கிருந்து எங்களை அழைத்துச் செல்வாள். சில நேரம் அம்மா தாமதமாக.வரும் நாட்களில்.ஆச்சியிடம்.பசிக்குத்ய் என்று சொன்னால் உப்புமா தான் செய்து தருவாள்.அதனாலேயே எனக்கும் சக்திக்கும் உப்புமா என்றாலே ஒவ்வாமை இருந்து வந்தது.அரை லிட்டர்   பால் 50 ரூபாய் விற்கும் இந்நிலையில் "டீ" தருவதே பெரிய விஷயம் தான்..ஒரு பாக்கெட் வாங்கி.அதில் ஏராள,,தாராள,,தண்ணீர் ஊற்றி இந்தப் பாலைத் தான் மூணு நாளைக்கு வச்சுக்கணும்.இதில் தான் மோர் க்கும் பால் எடுக்கணும் என்றாள்..( அப்பவே நினைச்சிருக்கணும்) ஒரே ஒரு அரை லிட்டர்...மூன்று நாள்....மூன்று பேருக்கு....அதோடு தயிருக்கு வேறு....அதனால் " டீ" என்கிற பெயரில் ஒரு திரவம் கிடைத்தது.அதையும் சக்தி மகிழ்ச்சியாக குடித்து விட்டுச் சென்றாள்.நான் தான் விழுங்கி.விழுங்கிக் குடித்தேன்.

ராம நவமி சுபிட்சமாய்...உப்புமாவோடும் தேநீரோடும் கோதுமை அப்பத்துடனும் இனிதே கொண்டாடப்பட்டது.

போனில்.பேசிய இரண்டு தோழிகள் பூஜை செய்து நிறைய பலகாரங்கள்.சாப்பிட்டதால்.வயிறு சரியில்லாமல் போனதாகவும் சொன்னார்கள்.

எனக்கும் வயிறு சரி இல்லை தான்

பின் குறிப்பு. தமிழக முதலமைச்சரே எனக்குக் கால் பண்ணி....வீட்டுக்குள்ளேயே இருக்கும் என்னை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார் தெரியுமா???.

 ( வெள்ளம்.வந்தப்ப...முன்னாள் முதலமைச்சர் அம்மாவும் என்கிட்ட பேசினாங்க..தெரியுமா???.)

12 comments:

  1. ஆனாலும் இப்படியா கலாய்ப்பது...! ஹா... ஹா...

    ReplyDelete
  2. அற்புதம்

    இதில் எனக்கு பிடிச்சதே சில்ற் கதை என்ழ்ர பெயரில் கற்பனை எழுதுவார்கள்
    அப்ப்டி இல்லாமல் அம்மாவின் சமயலை தத்துரூபமாக தேனீரில் தேனை எடுத்தும் உப்புமாவில் உப்பை எடுத்தும் இருப்பது அலாதி

    தொடர்க..

    ReplyDelete
  3. நன்கு எழுதக்கற்றிருக்கும் சிங்கங்கள். சூழ்நிலையை கண்ணுக்குள் படமாக்கிக் காட்டிய எழுத்துக்கள்.
    எழுத்துக்களுக்கு
    பாராட்டுக்கள்.
    எண்ணங்களுக்கு
    பிரார்த்தனைகள்.
    இரண்டும் மேம்பட்டு
    இமயமென உயர்க.

    ReplyDelete
  4. ம்ம்ம்ம்..செம்ம

    ReplyDelete
  5. லந்து ஓவராக இருக்குதே... இருப்பினும் ஓய்வு கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சூர்யா தனித்திருத்தலிலும் இன்பம்....என பதிவு...சொல்லுது...ஹாஹா...

    கீதா

    ReplyDelete
  7. உங்கள் வீட்டில் ராமநவமி அன்று நானும் இருந்தது போல் .... 🤣🤣🤣🤣

    ReplyDelete
  8. Lock down days நு புத்தகம்.எழுதிடு

    ReplyDelete
  9. Use this lockdown to implement all your works of writing books and useful activities

    ReplyDelete
  10. இனி , அஷ்டமியில் சக்தியும் ; நவமியில் சூர்யாவும் அவதாரமெடுக்க மகாவிஷ்ணுவிடம் கோரிக்கை வைத்துவிடலாம் . அப்படியே , இனிவரும் அஷ்டமி - நவமி தினங்களை நல்லநல்ல பட்சணங்களோடு கொண்டாடிவிடலாம் . என்ன சூர்யா சரிதானே .

    ReplyDelete
  11. எங்கள் பக்கத்து வீட்டு தாத்தா சொல்வார். எத்தனை விதமான உப்புமா அத்தனையும் ரொம்ப ரொம்ப அருமை ஆனா எல்லாரும் ஏன் உப்புமான்னாலே அலறுகிரார்கள் என்று தெரியவில்லையே என்று அங்கலாய்ப்பார்.(பாட்டியின் கைப்பக்குவம் அப்படி)

    ReplyDelete