Thursday 1 October 2015

வாங்கண்ணா...வணக்கங்கண்ணா....

அம்மம்மா......அப்பப்பா....அண்ணண்ண்ண்ண்ண்ண்ணா...அக்க்க்க்க்கா...

வாங்கோ.....வாங்கோ........எல்லாரும்  வாங்க....

எங்கப் புதுக்கோட்டைக்கு வாங்க.....

பதிவர் திருவிழாவுக்கு வாங்க....

எல்லோரும் எழுத்தாளர்களாக,,, பேச்சாளர்களாக,,,,,,,

வாங்க.....வாங்க....

எங்க ஊரு பெரியவுகள்ளாம் சேந்து...என்னைப் போல சின்னப்புள்ளைகள்,பெரிய புள்ளைகள் எல்லாரூம் எழுதணும்,,,நம்ம தமிழ் கருத்துக்களை ஆவணப்படுத்தணும் ங்கிற நோக்கத்துல வலை தளம் உருவாக்கச் சொல்லி அதுல எழுதுறதப் பாத்து கமெண்டுகள் போட்டு உற்சாகப்படுத்துறாக....

அப்புறம் நீங்க ரசிச்ச, பாத்த, கேட்ட, விஷயங்களை நம்ம எழுத சொல்லுறாக...

அந்தக் காலத்துல பல விஷயங்களை நாம் ஆவணப்படுத்தியதால பல நல்ல விஷயங்கள் கிடைச்சது.

அது செய்யாததால பல நல்ல விஷயங்கள்  நாம் இழந்துட்டோம் ல...

அதனால தாங்க.... நிறைய எழுதுங்க....எழுதுனத எல்லாருக்கும் பகிர்ந்து சொல்லுங்க...அதானே நம்ம தமிழ் சிறப்பு...

இப்ப பெரிய விழாங்க..

அதுல எங்க நிலவன் அங்கிள், திண்டுக்கல் தனபால் அங்கிள், கரந்தை ஜெயக்குமார் அங்கிள்,எங்க அப்பா செல்வா, வைகறை அங்கிள், கீதா ஆண்ட்டி,மாலதி ஆண்ட்டி, ஜெயா ஆண்ட்டி, ரேவதி அக்கா,  இப்படி எல்லாரும் உங்களோட வருகைக்காகத் தான் வழி மேல விழி வச்சுக் காத்திருக்காங்க...

வாங்க..உங்க பதிவுகளச் சொல்லுங்க....

எழுத்தால உயர்வோம்...எண்ணங்களால உயர்வோம்..என்ன நான் சொல்றது?

எங்கே உடனே ரயில்வே ஸ்டேஷன் கிளம்பிட்டீங்களா?

அம்மா அதென்ன கூட்டம் பஸ்ஸ்டாண்டுல?

அடடா...புதுக்கோட்டைக்கு டிக்கெட்டு இல்லையா? எல்லாரும் கார் எடுத்துட்டுக் கிளம்பப் போறீங்களா??

புதுக்கோட்டையில இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாம் பெரிய கூட்டமா?????

என்னாது எல்லா நாட்டுலருந்தும் புதுக்கோட்டைக்குப் போறாங்களா?

ஏன்? ஏன்?ஏன்? ஏன்?ஏன்? ஏன்?

அங்கே பதிவர் திருவிழாங்க



கூட்டத்தைப் பாக்க வாங்கண்ணா...வணக்கங்கண்ணாவோவ்

********************************

welcoming in pencil drawing க்கான பட முடிவு

7 comments:

  1. சூச்சு.....என்ன ஆச்சு....

    ReplyDelete
  2. ஆகா
    அருமை சூர்யா
    அருமை
    ஒரு குட்டி எழுத்தாளர் உதயமாகிக் கொண்டே இருக்கிறார்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சூர்யா....இன்னும் இன்னும் எழுத ....புகழ் பெற....ஆற்றல் வளர்த்துக் கொள்.அதோடு நிறைய அன்பையும் வளர்த்துக் கொள்

    ReplyDelete
  4. அருமைடா. புதுக்கோட்டையில் வீதி கூட்டத்தில் உன் படிப்பின் ஆழ-அகலம் பார்த்து அசந்துபோனேன். உன் பெற்றோர் இருவரும் படைப்பாளிகள். உன் கருவில் அமைந்த திருவை நீ உன் உழைப்பாலும் உணர்வாலும் வளர்ந்து எட்டுத் திக்கும் உனைப் பேசும்படி வளர்க! உனது ”அந்தக் காலத்துல பல விஷயங்களை நாம் ஆவணப்படுத்தியதால பல நல்ல விஷயங்கள் கிடைச்சது.

    அது செய்யாததால பல நல்ல விஷயங்கள் நாம் இழந்துட்டோம் ல..“ எனும் வரிகள் என்னைக் கவர்ந்தன. சிறிய வயதில் பெரிய சிந்தனை. நீ நல்லா வரணும் வருவே உன் வலைப்பக்கம் உன் புகழோடு சேர்ந்து வளர வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. இது -
      நா.முத்துநிலவன்,
      ஒருங்கிணைப்பாளர், விழாக்குழு.
      (ஆமா 10-10-புதுக்கோட்டைக்கு டிக்கெட் போட்டாச்சுல்ல? )

      Delete
  5. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete