Monday 14 December 2015

மீண்டும் மீண்டும் பள்ளி...மீண்ட பள்ளி..

இன்று முதல் பள்ளி மீண்டும் துவங்கியது..

நேற்று முதல் தூக்கம் பிடிக்கவில்லை..அது வேதனையா? மகிழ்வா? ஏதும் தெரியலை..ஆனால் ஏதோ மாதிரி..

வாசலில் நின்ற வாச்மென்..போங்க, போங்க,,,எல்லோருக்கும் சாக்லேட் இருக்கு என்றார்..

(அய் மழை பெஞ்சு திரும்பி பள்ளிக்கூடம் வந்தா இந்த ஊர் ஸ்கூல்ல சாக்லேட் தருவாங்களா??நல்ல ஸ்கூலா இருக்கேனு நம்பி.. போனேன்)

இன்று வெள்ளை நிற சீருடை என்பதால், எல்லோருமே புதியதாய் போட்டு வந்திருந்தோம்..( அழுக்காக்கிட்டு வந்து,  கிழிச்சிட்டு வந்து ,புதுசா ஒரு யூனிபார்ம் எடுத்துக் கொடுங்கனு சொன்னா, என்ன சொல்லியிருப்பாங்க இந்தப் பெற்றோர்கள்???இன்னும் ஒரு மாதம் தானே? அவ்வளவு சாக்கு சொல்லி வாங்கித் தராம இருக்க ஆயிரம் பொய் சொல்வாங்க...இப்ப கடவுளே வாங்க வச்சிட்டார்...)

போன உடன் கணக்கெடுப்பு நடந்தது அலுவலகம் வழியாகவும், எங்கள் தோழிகள் மூலமாகவும், யாருக்கெல்லாம் புத்தகங்கள் இல்லை. நிர்வாகமே புத்தகம் தரப்போறாங்களாம்..

இவ்வளவு ரண களத்திலேயும் பாட்னி மிஸ் கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி..எல்லாரும் ரெக்கார்ட் நோட்டு முடிச்சிட்டீங்களா   ன்னு???

கீழே பள்ளியின் அலுவலக அறையெல்லாம் போச்சாம்..பல பதிவேடுகள்..இனி கணினி வாங்கி அவ்வளவும் ஏற்றப்படவேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்``

என் வகுப்பறைகளில் எல்லாம் சில மீன்கள் பூச்சிகள், என்று ஏதேதோ..

முதல் தளம் வரை இருந்த பெஞ்ச் எல்லாமே துருப்பிடித்து, அலங்கோலமாகக் கிடந்தது..

இயற்பியல், வேதியல், ரெக்கார்ட் நோட் வைக்காதவர்கள் கூட ஏற்கனவே வைத்து விட்டதாகப் பீற்றிக் கொண்டார்கள்..( கொண்டாடுங்க,,,இது உங்கள் சாய்ஸ்))

மதியம் வரைக்கும் சாக்லேட் வரவே இல்லை..

ஒருவேளை சிறு வகுப்புகளுக்கு மட்டும் கொடுத்துட்டு போய்ட்டாங்களோ???

பேரிடர் மேலாண்மை பற்றி யும் அதனை சமாளிக்கும் முறை பற்றியும்  கூட்டத்தில் பேசிக்கொண்டே இருந்தார்கள்..

எது வந்தாலும் அழக்கூடாது.என்றார்கள் ((அழுதுகொண்டே))((இவர்களிடம் நான் அழுகிறேன்னு சொன்னேனா??சொன்னேனா??))

சாக்லேட்டக் கொடுங்கப்பா...

பேரிடர் மேலாண்மை பற்றி கற்க வேண்டுமென்றால் எங்க அம்மா சாப்பாட்டை ஒரு நாள் சாப்பிட்டாப் போதும் தைரியம் தன்னால வரப்போகுது..இதுக்கு எதுக்கு மீட்டிங்..?( ஓகேயா டாடி??)
(லூசு மேன்ஸ்...சாக்லேட்டத் தாங்கப்பா))

(இது அம்மாவுக்கு...உங்க அன்பான, ருசியான (!!!!!!!????????) சாப்பாட்டைச் சாப்பிட்டால் தெம்பு வரும் நு மட்டும் தான் சொன்னேன் மா...(கில்லர்ஜி அங்கிள் நடுவில் வந்து ஏதும் சொல்லாமல் இருப்பாராக))

கொஞ்சம் கொஞ்சமாய் கேள்விப்பட்டோம்..வீடு இல்லாமல் போன, உறவினர்கள் இல்லாமல் போன, என்று மழை அடித்துச் சென்ற அனைத்தையும் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார்கள்..

நான் மட்டுமெ கொஞ்சம் ஜாலியாக திரில்லிங்காக தப்பித்த கதை சொன்னேன்...(டேஸ்ட்டுக்காக கொஞ்சம் பொய் மிக்ஸிங்))(உண்மை சொன்ன அழுவாச்சியா இருப்பாங்க..சீச்சீ அது நமக்குப் பிடிக்காத ,ஒவ்வாமை ஆகும் பொருள்...)

ஆயாம்மாக்கள் இன்று முழுவதும் துப்புரவுப் பணிகளில்

அதனால், பல வகுப்புகளும் ஒன்றாய்க் கலந்து...பாடமில்லாமல் ஒருநாள்..

(கடைசி வரைக்கும் சாக்லேட் தரலை...)(எங்களுக்கு கொடுக்கிறதாச் சொல்லி ஆட்டைய போட்டாங்க...) ( இப்படி பச்சைப் புள்ளைகள்ட்டருந்து பறிச்சி  தின்னுட்டீங்களே...)))

ஓகே..ஆல் சித்தப்பாஸ்,,,மாமாஸ்,,,அத்தைஸ்,,பெரியப்ஸ்...சித்திஸ்....போய்ட்டு வரேன்...

வாங்க எங்க வீட்டுக்கு...

மழைக்குப் பின்னான வீடு...HOW IS IT??? பாக்கலாம்..
************************************************

இது கட்டுரைங்க...இன்னைக்கு தத்துவம் தீர்ந்து போச்சு...இன்னொரு நாள் சொல்றேன்...சரியா...
****************************************************************

7 comments:

  1. எவ்வளவு தைரியம் அம்மாவுடைய சாப்பாட்டைப்பற்றி விமர்சனம் உங்க அப்பா சொல்லச் சொன்னாரே... இன்றைக்கு உனக்கு இரவு டிபன் Cut

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா...தப்பித்தேன்..இன்று உப்புமா...உங்களுக்கு என்ன வேண்டும்? எங்கிருந்தோ வந்து இப்படி காப்பாத்திடீங்களே...இதுக்கே உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம்...வாழ்த்து

      Delete
  2. என்னது தத்துவம் தீர்ந்து விட்டதா....!!!!

    ReplyDelete
  3. என்னது தத்துவம் தீர்ந்து விட்டதா....!!!!

    ReplyDelete
  4. ஹாஹா@ வேதனையிலும் நகைச்சுவை! சிரிக்கவும் வைத்தே,சிந்திக்கவும் வைத்தேம்மா. அருமை

    ReplyDelete