Wednesday 12 April 2017

தெய்வீக ராகம்

இரண்டு நாட்கள் புதுகையில்...டாடியோடு இருக்கலாம் என நினைத்தேன்...ஆனால் டாடி நிலவன் அங்கிளோடு...

என் தோழிகள் யாரையும்.பார்க்க இயலவில்லை..அம்மாவும் பள்ளிக்குச் சென்று விட்டார்..அம்மா என் போனையும் எடுத்துச் சென்றுவிட தொடர்பு கொள்ளக்கூட இயலவில்லை...மீண்டும் நானும் புத்தகங்களும்...
ஐஸ்வர்யா கூட்டிப் போனார் டாடி..

இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தபின் புதுகை வந்திருக்கிறேன்..சில மாற்றங்கள் தவிர ஏதுமில்லை...ஆதிகாலத்து அலங்கார மாளிகை கடை வந்திருப்பதாகவும் அந்த பிருந்தாவன வீதி எப்போதும் கூட்டமாக இருப்பதாகவும் சொன்னார்கள்..போகவில்லை..மறுநாள் பங்குனி உத்திரம் என்பதால் நகைக் கடை வீதி..அதாவது மார்கெட் வீதி கூட்டமாய் இருந்தது..அதுவும் டி நகர் கூட்டம் போல் இல்லை..இப்படி எனக்குள் ஒரு நினைவு வந்ததும் எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது...மனிதர்களை மட்டும் அல்ல..இடங்களையும் ஒப்பிடுவது தவறு...

நூலகம் செல்ல நினைத்தேன்..புதுக்குளம் செல்ல நினைத்தேன்..ஆனா புவனேஸ்வரி கோயில் சென்றேன்..

இருக்கும் இரண்டு நாட்களில் டாடியைக் கேட்காமல் நானாக பிரகதம்பாள் கோயில்..மியூசியம்..குமரமலை..புதுக்குளம்..சினிமா நட்புகளை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததெல்லாம் தப்பு..எனக்காக அவர் தன் இயல்புகளை விட வேண்டியதில்லை..ஆனாலும் வருத்தமளித்தது என்றால் அது என் மனதின் விசித்திரம்...

புதுகை எனக்கு மகிழ்வையும் குதூகலத்தையும் தரவே இல்லை..இரவே. அம்மாவின் ஆணைக்கிணங்க..தென்காசி தாத்தாவீடு கிளம்பியாகிவிட்டது

அங்கு என்னை ஒரு பத்து கிலோ வாவது ஏற்றிவிட வழி வகைகளை ஆச்சி கட்டாயம் செய்யும்.சற்றே பயம் என்றாலும் ஆச்சி..தாத்தாவின் அன்பு அலாதியானது..இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில்லை..பிரியங்களைக் கொட்டுவதில்...

ஆனால் பெரிய ஆபத்து என்ன வென்றால் திருவாசகம்..தேவாரம்..சிவ புராணம்.கந்த சஷ்டி கவசம்..மகிஷாசுர மர்த்தினி சுலோகம்...என்று இந்தந்த தினங்களில்..இன்னின்ன நேரங்களில் அதைச் சொல்ல வேண்டிய கட்டாயமும்..வலியுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுவேன்..அது தான் இடர்கிறது..

சாமி கும்புடுவது கட்டாயமாக்கக்கூடாது என்பது தான் என் கருத்தே தவிர..கும்பிடவே வேண்டாம் என்பதல்ல...

இன்னொரு நாள் இந்தப் பயணக்கட்டுரைகளையும்..அனுபவக் கட்டுரைகளையும் வெளியிடுகிறேன்.இப்போதைக்கு விடை பெறுகிறேன்...
இதோ தாத்தா பாடுகிறார்

...வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்                                                                         இன்மையுமாய்க்
கோனாகி யான்எனது என்று அவரவரைக்                                                                   கூத்தாட்டு
வானாகி  நின்றாயை என்சொல்லி                                                                     வாழ்த்துவனே...

5 comments:

  1. உங்களின் ஆதங்கம் புரிகிறது......படிக்கும் போது மனதிற்கு கஷடமாக இருக்கிறது

    ReplyDelete
  2. பெரியவர்கள் சொன்னால் கேட்கணும்...! சரியா...?

    ReplyDelete
  3. anupava katturai, anupavithathin pirathepalipu, adutha katturai, aananthamaga pirathepalika, theiveega raagam thunai puriyatum.

    ReplyDelete