Monday 28 September 2015

ஏறுவோம் முன்னேறுவோம்


ஏறுவோம் முன்னேறுவோம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3  பெண்ணிய கட்டுரை

*****************************************
பெயர்:S.ராகசூர்யா
வயது:15
கல்வித்தகுதி:XI-std
முகவரி:சென்னை..600042
****************************************

ஏறுவோம் முன்னேறுவோம்

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா

 பாரதியார் பெண்மையை போற்றுவோரின் நாயகன்.அவன் மொழி கொண்டு என் கட்டுரை தொடங்குகிறேன்.


பள்ளியில், எப்போதும் மாணவர்களைத்தான் தலைவர் ஆக்குகிறார்கள். வகுப்பு ஆசிரியர் பெண்ணாக இருந்தாலும் அவர்களும் அந்த நடைமுறைதான் பின்பற்றுகிறார்கள். துணைத்தலைவராகத் தான் மாணவிகள் இருக்க வேண்டும். அந்த ஆண் தலைவர்கள் பெண் தலைவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. ஆனால் பெண் தலைவர்கள் யாராக இருந்தாலும் தாங்கள் சொல்வது எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் நினைத்துக் கொள்கிறார்கள்.

அதோடு தினமும் அவர்களுக்குப் பிடித்த மாணவிகள் என்றால் கரும்பலகையில் பெயர் எழுதமாட்டார்கள். ஆனால் பிடிக்காதவர்கள் என்றால் அதுவும் முதல்வர் சுற்றுக்கு வரும் நேரம் அறிந்து எழுதிக் கொடுத்து மாட்டி விடுவார்கள். தவறே செய்யவில்லை என்றாலும் ஒரு சிறு தவறு செய்தாலும் பல தவறுகள் செய்தது போலவும்  போட்டுக் கொடுத்து விடுவார்கள். பொய்களுக்கு எப்போதுமே துணைகள் அதிகம் தானே. அவன் நண்பர்கள் எல்லோரும் அவனுக்கு சாதகமாகத் தான் சாட்சி சொல்வார்கள். இல்லாத ஒன்று இருப்பதாக சொல்ல எத்தனை சாட்சி தேவைப்படும். நம்புவது போல் சொல்வதை உண்மை யறியாமல் முதல்வர் முதல்,, வகுப்பு ஆசிரியர் வரை நம்புவது தான் கொடுமை

அதே போல் பேச்சுப்போட்டிக்கு பக்கத்தில் உள்ள இடங்களுக்கு மட்டுமே மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தூரத்தில் போய் பங்கேற்க வேண்டும் என்றால் உன்னை யார் கூப்பிட வருவார்கள்?, உங்கள் அப்பா எங்கே வேலை பார்க்கிறார்?. உங்கள் அப்பத்தா எங்கே வேலை பார்க்கிறார்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, ”சீச்சீ ”இந்த போட்டியே வேண்டாமடா சாமி என்று முடிவெடுக்க வைத்து விடுகிறார்கள். ஒரு வேளை வகுப்பு ஆசிரியை அனுமதித்து விட்டால் பள்ளி முதல்வர் நம் குலம் , கோத்திரம் எல்லாம் கேட்பார். ( ஒருவேளை மாப்பிள்ளை பார்க்கிறோமா அல்லது போட்டிகளுக்குத்தான் அனுப்புகிறோமா என்பதை மறந்து விடுவார்கள் போலும்.) அதையும் விடுத்து 

பள்ளித் தாளாளரிடம் அனுப்பினால்< அம்மா எல்.ஐ.சி.லோன் வாங்கக் கூட இத்தனை கையெழுத்து போட்டிருக்க மாட்டார்கள். இவர்களிடம் கைகட்டி அந்த “போனோபைட்” சான்றிதழ் வாங்குமுன் அய்யோ...அம்மா....ஆனால் மாணவர்களுக்கு இது எதுவுமே கிடையாது. பஸ்ல போய்டு..என்று சொல்லி ,பேருந்து எண் சொல்லி, இங்கே நிற்க வேண்டும், நடக்க வேண்டும், எல்லாம் சொல்லித்தருவார்கள். அதை எங்களுக்கும் சொல்லி ஊக்கப்படுத்தி போக வைக்கலாம் என்று இது வரை யாருக்கும் தோணுவதில்லை.. 

பள்ளியில் தான் அப்படி என்றால் வீட்டில் ஒரு திருவிழாவுக்கு கூட்டிப்போங்கள் என்றால் இரண்டு பக்கமும் அம்மா, அப்பா இருவரும் கையை இருக்கப் பிடித்துக் கொள்வார்கள்..( இடி ராஜாக்களிடமிருந்து காப்பாற்ற அல்லது நான் தொலைந்து போகாமல் இருக்க என்று பல்வேறு காரணங்கள் வேறு..இவர்களுக்கு எங்கிருந்து தான் ஊறுமோ?)

இது தான் இப்படி என்றால் நான் அதிர்ந்த ஒரு விஷயம் ஒன்று உண்டு. ஒருநாள் அம்மா தன் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார். நாங்களும் குடும்பத்துடன் போனோம். ( எங்கே போனாலும் அப்படித்தான்..நல்லவேளை காய்கறி கடைக்கும் அரிசிக் கடைக்கும் தான் நாங்கள் குடும்பத்துடன் போகலை. அம்மா தன் சி.ஆர்.சி.கூட்டம், தலைமைஆசிரியர் கூட்டம் முதற்கொண்டு குடும்பத்துடன் தான் கூட்டிச்செல்வார்.)(என்ன பேமியோ என்று நீங்கள் முணகினாலும் அது தான்..அப்படித்தான்) 

அங்கே தலைவர் தலைவர் என்று ஒரு பெண் பெயரைச் சொல்லி பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் விழா மேடையில் அம்மாவைத் தவிர வேறு பெண்களே இல்லை. நானும் கூட, வராத தலைவருக்கு இப்படி ஒரு மரியாதையா? என்ன மக்கள்? அவர் நல்ல “ பணி” ஆற்று வார் போல என்று நினைத்தேன். ஆனால் இப்போது தலைவர் பேசுவார் என்றதும் ஒரு ஆண் வந்து பேசினார். நான் திடுக்கிட்டாலும் சுஜாதா என்று ஒரு ஆண்,  பெண் பெயர் கொண்டு கதை எழுதலாம்  இது செய்யக்கூடாதா? சரி அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துத் தான் அமைதியானேன். 

ஆனால் விழா முடிந்ததும் நிகழ்வு வருகைப் பதிவேடு நோட்டில் , புடவையைக் கூட ஒழுங்காகக் கட்டத் தெரியாத, தலை சீவாத, குளிக்காத ஒரு பெண் கையெழுத்திட்டாள்.    (கையெழுத் து வாங்கும் பணி என் தலையில் அம்மா கட்டியிருந்தார்).  அவர்களுக்குத் தெரியாது ,அவர்கள் பெயரைச் சொல்லி... அந்தக் கோட்டுக்கு நேரே கையெழுத்து வாங்கு என்று சொல்லி யிருந்ததால் அய்யோ இந்தப் பெண்மணி தலைவர் என்று போட்டிருந்த இடத்திற்கு நேரே ஆனால் மிகச் சரியாக சுசீலா என்று (கோணல் மாணாலாகத்தான்) அய்யோ இது வேறு சுசீலா போல..அம்மாவிடம் எப்படி திட்டு வாங்குவது என்று நினைத்தால்...அய்யோ அந்த அம்மா தான் தலைவராம். அப்போ மேடையில் பேசியது,,அவள் கணவராம்.ஆட்சியர் அலுவலகதுக்கே அவர் தான் போவாராம். எங்கள் வகுப்பே தேவலாம் என்று இருந்தது. நாங்கள் டம்மியாக இருந்தாலும் நாங்கள் எங்கள் பெயர் அழைக்கப்படும் போது நாங்கள் தான் பேசுவோம்.

சமுதாயத்தில் இந்த நிலையில் தான் இருக்கிறது, பெண்களின் முன்னேற்றம். அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம், இது வரை அந்த பகுதியில் பெண் தலைவர்களே இல்லை. இப்போது பெண் பெயராவது தலைவராக இருக்கிறதே அதுவே பெரிய முன்னேற்றம் என்று சொன்னார்கள்

அப்புறம் சமூகத்தில் எப்போதும் ஒரு விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது பெண்கள் தங்கள் ஆடைகளை சரியாக அணியாததால் தான் இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். பெண்கள் ஆடைகளை ஒழுங்காக போட்டு விட்டால் இவர்கள் ஊழல் செய்வதை நிறுத்தி விடுவார்களா? கோயில்கள் சிலை திருட்டு நின்று விடுமா? அரசாங்க அலுவலகத்தில் செம்மையாக தங்கள் பணிகள் செய்திடுவார்களா? பி.எஃப் லோன் பணப் பரிவர்த்தனை இல்லாமல் ஷேன்ஷன் பண்ணிவிடுவார்களா? எல்லாத் துறைகளும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துவிடுவார்களா? விவசாயம் மீண்டும் தழைத்து விடுமா? எதுவுமே இல்லை. ஏதோ ஒன்று சொல்வதற்காக ஆடைகளைப் பற்றிக் குறை சொல்கிறார்கள். 

எங்கள் இனிய தோழி மலாலா நல்ல ஆடைகளைத் தானே அணிந்திருந்தார். அவர் ஏன் அவ்வளவு பாதிப்புக்கு உள்ளானாள்? அவள் போல் தான் எங்களைச் சுட்டுக் கொல்ல முயற்சித்தாலு ம் நாங்கள் உயிர்த்தெழுவோம், மேன்மையாவோம்

மற்றுமொரு விஷயத்தை இவர்கள் தவறாகவே பயன்படுத்துகிறார்கள். பெண்கள் அதிகமாக புரண் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.எங்களுக்கு நேரமே இல்லை. பெரியவர்களாக இருந்தால் வீட்டு வேலை செய்கிறார்கள். என்னைப் போல் சிறியவர்களாக இருந்தால் படிக்கிறோம். நாங்கள் எந்த தேநீர் கடைகளிலும் நின்று நேரம் கடத்துவதில்லை. அப்புறம் எப்படி புரண் பேசுவோம்? 

ஆண்கள் தான் கட்டைச்சுவர்களில் உட்கார்ந்து, தேநீர்கடைகளில் இருந்து கொண்டு பேசிக்கொண்டேடேடேடே இருக்கிறார்கள். நாங்கள் படிக்கிறோம் இல்லாவிட்டால் அம்மாவுக்கு அப்பாவுக்கு உதவி செய்கிறோம்.

எனக்குத் தெரிந்து அம்மாவுக்கு வரும் புலம்பல் தொலைபேசிகளில் பெண் பிள்ளைகளைப் பெற்றவரிடமிருந்து வருவதே இல்லை. ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள் தான் பணம் கேட்கிறான். சொன்னது கேட்கமாட்டுறான். எப்போதும் போன், அல்லது தொலைக்காட்சிப் பெட்டி முன் கிடக்கிறான்  என்று புலம்புகிறார்கள். 

என்வீட்டிலும் என் அம்மா தன் அம்மா வீட்டுக்குப் போனால் பாத்திரம் தேய்த்து, துணிதுவைத்து, சமயத்தில் கரண்ட் பில் கட்டிகொடுத்து, காய்கறி ,மளிகை என்று எல்லாம் வாங்கிக் கொடுப்பாள்.

 ஆனால் அப்பா தன் அம்மா அப்பா  வீட்டுக்குப் போனால் சும்மா டி.வி. பார்ப்பார். முடிந்தவரை அவர்களை மிரட்டுவார். அதட்டுவார். 
அப்படியானால் உண்மையான அன்பும் பிரியமும் உழைப்பும் பெண்களிடம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல வில்லை பெண்களிடம் தான் அதிகம் இருக்கிறது. அது இன்னும் தன்னை முன்னேற்றிக் கொள்வதிலும் மாற வேண்டும். மாறுவோம். ஏறுவோம். முன்னேறுவோம். எங்கள் விடிவெள்ளி இதோ நான் இந்த வலைதளத்தை ஆரம்பிப்பதில் தொடங்குகிறது. இதை வாசித்தபின் நீங்கள் யோசிப்பதில் தொடர்கிறது.

8 comments:

  1. Replies
    1. உங்களைத் திட்டியிருக்கிறேன்.தூளா....(தூள் என்றால் துகள் என்ற அர்த்தமா அல்லது பிரமாதம் என்று அர்த்தமா தந்தையே????)

      Delete
    2. என்னத்தச் சொல்ல.....

      Delete
  2. மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.இவர் போன்ற இளவயதுடையவர்கள் அதிகளவில் கணினி இணையத்தமிழில் பங்காற்ற வேண்டும்.வாழ்த்துக்கள் குழந்தாய்!........
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன், 9585600733
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம் - 638402

    ReplyDelete
  3. நன்றி அங்கிள்

    ReplyDelete
  4. அருமை
    அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அட சூப்பரா இருக்கே ...வெற்றி பெற வாழ்த்துகள் மா..

    ReplyDelete