Wednesday 30 September 2015

பொம்மைகளும் நாங்களும்...

புதுகையில் நடக்கும் வலை பதிவர் விழாவிற்காகவும், தமிழ் இணையம் நடத்தும் போட்டிக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது. என்று உறுதியளிக்கிறேன்.2015.போட்டி முடியும் வரை வேறெங்கும் அனுப்ப மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

வகை 2. 
****************************************************


இந்த உலகத்துல ரொம்பக் கஷ்டம் ரொம்பக் கஷ்டம் பல பேரு பல மாதிரியா புலம்புவாங்க...

நாங்க எப்படிடா மார்க் வாங்குறதுன்னு புலம்புவோம்ல அது மாதிரி..

சின்னப் பிள்ளையா இருக்கும் போது அம்மா கடைக்குக் கூட்டிட்டுப் போனா எதையாவது வாங்கணும் வாங்கணும் தோணும்...ஆனா அம்மாவைப் பார்க்க பாவமா இருக்கும். எல்லா அம்மாவும் அதெல்லாம் வேணாம் நு சொன்னா எங்க  அம்மா மட்டும் உடனே தன் பர்ஸைப் பாப்பாங்க. அதுல பணம் இருந்ததுனா எதா இருந்தாலும் வாங்கிருவாங்க. அப்படி தான் பல பொம்மைகள் எங்க வீட்டுல

நடக்குற பொம்மை, கார் பொம்மை, டெடிபியர் , பாப்பா பொம்மை, இப்படி பல பொம்மைகள் எங்கள் வீட்டில்.

அப்பா சிங்கப்பூர் போனதும் சாக்லேட் வாங்குனாரோ இல்லையோ பொம்மைகள் வாங்கி அனுப்பினார். கவனிக்க பொம்மை”கள்..”

,அம்மாவுக்கும் அப்போது பதவி உயர்வு கிடைக்க புதுக்கோட்டையின் கடைக்கோடி கிராமத்துக்கு மாற்றப்பட்டார். அப்பா அருகே இல்லாததால் நாங்கள் வேறு ஒரு வாடகைக்கு எங்கள் பள்ளியின் அருகே வீடு பார்த்து மாறினோம். 

அம்மா சமையல் சாமான்கள் , புத்தகங்கள் மட்டும் எடுத்துச் செல்லலாம். வாராவாரம் இந்த வீட்டுக்கு வரலாம். வீட்டை வாடகைக்கு விட வேண்டாம் என்று சொல்ல, நாங்கள் எங்கள் பொம்மைகளை பரிதாபமாக பார்த்தோம்.அ ம்மாவிற்கு எங்கள் மீது இரக்கம் பொத்துக் கொண்டு வர பொம்மைகளோடு பயணமானோம்.

மாலை அம்மா பள்ளிவிட்டு இரண்டு பேருந்துகள் மாறி பேருந்து நிலையம் வந்து அதன் பின் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து வர வேண்டும். அது வரை இந்த பொம்மைகள் தான் எங்களின் ஆறுதலும் தேறுதலும். அம்மா வீடு வந்ததும் ஏன்மா வீடெல்லாம் இப்படி பரப்பி போட்டுருக்கீங்க என்று தினமும் கேட்பாள். அப்போதெல்லாம் எங்களுக்குப் புரிவதில்லை. அதன் பழுவும் சுமையும்.

அம்மாவுடன் நாங்களும் சேர்ந்தே எடுத்து வைத்து அதன் பின் ஏதாவது செய்து சாப்பிட்டு வீட்டுப் பாடங்கள் எழுதி தூங்கப்போகும் போதும் எங்களோடு தூங்கும் பொம்மைகளும்..

தினமும் அவைகளோடு வாழ்வதால் நானும் அக்காவும் அதற்கு பெயர்கள் வைத்தோம். எங்களுக்கு பெயர்கள் இருப்பதால் அவைகளுக்கும் அவசியம் பெயர் இருக்க வேண்டும் என்று கருதினோம். 

வெள்ளை டெடி பியர் ,(நந்து,),  பெண் பொம்மைக்கு மித்ரா,நாய்க்குட்டி பெயர் சிவா, டைகருக்கு ரோஷன், கருப்பு டெடிபியருக்கு கார்த்திக், தலை விரித்து ஆடும் பொம்மைக்கு வந்தனா, தையா தையா என்று ஆடும் பொம்மைக்கு பப்பி, அப்படியாக பெயர்களை அன்றாடம் வைப்போம். மிகச் சரியாக ஒவ்வொன்றின் பெயரையும் சொல்லி அழைப்பாள் அக்கா.

இதெல்லாம் அம்மாவிற்குப் புரியாது என்று நினைத்த வேளையில் ஒருநாள் உன் நந்து ஏன் தண்ணிக்குள் கிடக்கிறான் என்று கேட்க நாங்கள் பெயர் வைத்தது அம்மாவிற்கு எப்படித்தெரியும் என்று எங்களுக்கு ஒரே ஆச்சரியம். அம்மாவும் , என் கனவில்நீங்கள் என்ன செய்றீங்கன்னு பிள்ளையார் அப்பச்சி தினம் தினம்வந்து சொல்லும் என்று சொன்னவுடன் அப்படித்தான் போல. என்று நினைத்து தெரியாமல் நான் சாக்லேட் சாப்பிட்டால் கூட தெரிந்துவிடும் என்று பயந்து நான் அம்மாவுக்கு தெரியாமல் சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். 

பொம்மைகளின் எண்ணிக்கை வர வர அதிகமாகியதே தவிர குறையவில்லை. எங்கள் வீட்டில் ஷோ கேஸ் ல இருக்கிற பொம்மைகளைப்பார்த்து விட்டு  பிறந்தநாள் தீபாவளிக்கெல்லாம் பொம்மைகள் கிடைத்தது. 

தாத்தாவும் ஒருநாள்  நாங்கள் பொம்மைகளோடு விளையாடுவதைப் பார்த்து ஒரே நேரத்தில் 10 பொம்மைகள் வாங்கித் தந்தார். ஒவ்வொரு பொம்மைக்கும் பெயர் வைப்பது சற்று சிரமாக இருந்த பொழுதில் அம்மா தன் பள்ளியில் உள்ள பெயரைச் சொல்லச் சொல்லி அதன் பெயர் வைப்போம். அல்லது எங்களது வகுப்பில் உள்ளவர்களின் பெயர்கள் வைக்கப்படும். எங்கள் வகுப்பு பெயர்களை நாங்கள் விரும்புவதில்லை. அப்புறம் அந்த உண்மையான பிரண்டு டன் ”டூ “ விட்டால் இந்த பொம்மை களுடனும் விளையாட முடியாதே.

   வாடகை அதிகமாக அதிகமாக, பள்ளி மாறியதாலும் வேறு இரண்டு வீடுகள் மாறும் போதும் பொம்மைகள் கூடவே வந்தன. 
 எங்கள் தேவையான பொருட்களுக்கு ஆகும் இடத்தை எல்லாம் இந்த பொம்மைகள் ஆக்கிரமித்ததாலும் நாங்களும் பொம்மைகளோடு கொஞ்சம் தள்ளி இருக்க ஆரம்பித்தோம். 
நாங்கள் சென்னை வந்த போது முக்கியமான பொம்மைகளை மட்டும் எடுப்போமா என்றாள் அக்கா. ஆனால் அங்கே வீடு எப்படிக் கிடைக்குமோ என்ற பயத்தால் எடுத்து வரவில்லை. இப்போது பொம்மைகள் புதுகை வீட்டில் சிலிப்பர் செல்லாக மேலே பரணில் கிடக்கிறதாம்..

உங்கள் யாருக்கேனும் அந்த பொம்மைகள் வேண்டுமா?

பின் குறிப்பு:
*****************
சில நாள் கழித்து நீங்களும் இப்படிஒரு பதிவு போடுவீர்கள்.

பரணுக்குள் கிடந்தாலும் அம்மாவின் அன்போடும் அப்பாவின் ஆசையோடும் கிடக்கின்றன பொம்மைகள்
******************************************************


நீதி:
*******
சத்தியமாய் தேவைக்கும் அதிகமாக பொருட்கள் வாங்கினால் உங்களுக்கும் உங்களை ச் சுற்றும் சூழலுக்கும் பாதிப்பு தான்
தத்துவம்:
************
நீங்கள் விளையாட தேவையான பொம்மை தவிர வாங்கும் ஒவ்வொரு பொம்மையும் அடுத்தவருடையது. அதுவும் நல்லதல்ல...


3 comments:

  1. கற்பூர பொம்மை ஒன்று...கைவீசும் தென்றல். இங்கு....

    ReplyDelete
  2. தத்துவம் உண்மையிலேயே அற்புதம்
    வாழ்த்துக்கள் சூர்யா
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம் தங்கள் பொம்மை அனுபவம் அழகு அருமை! ஆனால் எங்க கிராமக் குழந்தைகளுக்கு இந்த மாதிரி பொம்மைகளில் விளையாடி பார்த்ததே இல்லை! பொம்மைகளுக்கும் தொரியும் போல யார் கைகளில் தவழ வேண்டும் என்று?!!! நன்றி

    ReplyDelete